ஆவலுடன் பார்த்துகொண்டிருக்கிறேன்.
உள்ளூர் தொலைக் காட்சியில்
மீனாட்சி திருக்கல்யாணம்.
அவளும் பார்த்துக்கொண்டிருக்கலாம்...!
மாசி வீதிகளில் தேரோட்டமாம்.
அவளோ நின்று கொண்டிருக்கிறாள்.
பிறகு எப்படி?
மொத்த ஊர் சனங்களும் வடம் இழுக்க...
மொய்குழல் மெல்ல நடந்து வருகிறாள்.
ஒன்று நகர்கிறது.
மற்றொன்று நடக்கிறது.
கள்ளழகருக்கு
எதிர்சேவை செய்ய
பொதியம் நோக்கி
மக்களும் - அவள்
எதிர்முகம் காண
நானும் திரிந்து
கொண்டேயிருக்கிறோம்...!
இறுதியில் எனக்கான ஒரு
சிறு புன்னகையில் அவளும்
வைகையாற்றில் அழகரும்
ஒரு சேர எழுந்தருளினார்கள்...!
No comments:
Post a Comment