ஒற்றையடிப் பாதைகள்
மாட்டு வண்டித் தடங்களாகி
ராஜ பாட்டைகளாக மாறி
தார்ச் சாலைகளாக உருவெடுத்து
இருவழிச் சாலைகளாக வளர்ந்து
இப்போது நான்கு - பிறகு
ஆறு வழிச் சாலைகளாகி
எட்டு பதினாறான பின்பும்
நவீன வாகனக் கரையான்கள்
பூமியின் ஓடுகளை உள்ளீடற்ற
புற்றுக்களாய் மாற்றும் போது
மனிதர்கள்
கார்பன்-டை-ஆக்சைடை
சுவாசிக்கும் உயிரினமாக
மாறியிருக்கக் கூடும்!
*****************************
நிகழ்வுகள் கடந்து
முற்றுப் பெறும்
வாழ்க்கை போல்
காட்சிகள் நகர்தலில்
நிலையாமை உணர்த்தும்
கறுப்புக் கம்பளம்!
தூரத்தில்
சூனியத்தை அறிவுறுத்தும்
கானல் நீர்;
ஆம்! ஞானத் தேநீர்!
வளைந்து நெளிந்து
வீழ்ந்து கிடக்கும்
நீளமான இரவு!
புவியின்
நிலப் பரப்பை
சுற்றி வளைத்த
கலியுக ஆதிசேஷன்!
மாட்டு வண்டித் தடங்களாகி
ராஜ பாட்டைகளாக மாறி
தார்ச் சாலைகளாக உருவெடுத்து
இருவழிச் சாலைகளாக வளர்ந்து
இப்போது நான்கு - பிறகு
ஆறு வழிச் சாலைகளாகி
எட்டு பதினாறான பின்பும்
நவீன வாகனக் கரையான்கள்
பூமியின் ஓடுகளை உள்ளீடற்ற
புற்றுக்களாய் மாற்றும் போது
மனிதர்கள்
கார்பன்-டை-ஆக்சைடை
சுவாசிக்கும் உயிரினமாக
மாறியிருக்கக் கூடும்!
*****************************
நிகழ்வுகள் கடந்து
முற்றுப் பெறும்
வாழ்க்கை போல்
காட்சிகள் நகர்தலில்
நிலையாமை உணர்த்தும்
கறுப்புக் கம்பளம்!
தூரத்தில்
சூனியத்தை அறிவுறுத்தும்
கானல் நீர்;
ஆம்! ஞானத் தேநீர்!
வளைந்து நெளிந்து
வீழ்ந்து கிடக்கும்
நீளமான இரவு!
புவியின்
நிலப் பரப்பை
சுற்றி வளைத்த
கலியுக ஆதிசேஷன்!
No comments:
Post a Comment