சில மாதங்களுக்கு முன் நானும் எனது நண்பனும் இரண்டுச்சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தா மலை, சித்தன்ன வாசல் போன்ற இடங்களுக்கு சென்று வந்தோம். அடிக்கடி நாங்கள் இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றுவருவதுன்டு. உங்களின் பயணத்தின்போது இந்த பகிர்வு பயனுள்ளதாக இருக்கலாம்.
நார்த்தா மலை:
பார்த்துகொண்டிருக்கும்போதே பொழுது மெல்ல விடியத் தொடங்கியது.
மேலூர் நான்கு வழிச் சாலையிலிருந்து பிரிந்து திருப்பத்தூர் சாலையை பிடித்தோம். சாலையில் இருமருங்கிலும் மரங்கள் இருப்பது ஒரு தனி அழகுதான். மருது சகோதரர்களை தூக்கிலிட்ட இடமான திருப்பத்தூர், சேதுபதி மன்னரின் கோட்டையான திருமயம் ஆகிய வரலாற்று சின்னங்களைக் கடந்து புதுக்கோட்டையை அடைந்தோம். புதுக்கோட்டையில் ஒரு சிறிய மெஸ்ஸில் இருவரும் காலை சிற்றுண்டியை முடித்துகொண்டோம். வயிற்றைக் கெடுக்காத உணவு. பின்னர் அங்கிருந்து கிளம்பி திருச்சி செல்லும் நெடுஞ் சாலையில் கீரனூருக்கும், புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பொம்மிடிமலை எனும் சிற்றூரிலிருந்து இடப் பக்கமாக திரும்பி மூன்று கிலோ மீட்டர்கள் சென்று நார்த்தா மலையை அடைந்தோம்.
இருபுறமும் ஆலவிருட்சங்கள்
நம்மை வரவேற்கின்றன. இங்கு கற்களும், பாறைகளும் நிறைந்த மலைகள் அதிகமாக காணப்படுகின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டுவதற்கு நார்த்தா மலையிலிருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற செய்தியை அறிந்தோம். இங்கு கடம்பர் மலைக் கோயிலும் (குடைவரை), விஜயாலய சோழன் கோயிலும் இந்திய தொல்பொருள் ஆணையத்தின் (ASI) பார்வையில் பாதுகாக்கபடுகின்றன. "சோழநாடு சோறுடைத்து" என்பார்கள். ஆனால் "சோழநாடு கல்லுடைத்து" என்றாலும் தகும். எப்படித்தான் கற்களை இங்கிருந்து தஞ்சை வரை கொண்டு சென்றார்களோ தெரியவில்லை. பெரிய பெரிய உருள் கட்டைகளை மாற்றி மாற்றி வைத்தும், யானைகளையும், காளைகளையும் பயன்படுத்தி கற்களை கொண்டு சென்றார்கள் என அறிந்தோம். தற்போது உள்ள கிரேன், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் இல்லாமல் வெறும் மனித ஆற்றலையும் விலங்குகளையும் மட்டுமே நம்பி எவ்வளவு பெரிய கோயிலை (தஞ்சை) எழுப்பியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்று நினைத்தபோது ஒரு நிமிடம் சிலிர்த்துப் போய்விட்டேன். எனக்கு 10000 BC Mummy போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் நினைவிற்குள் வந்து சென்றன.
கிராமத்தை அடைந்தவுடன் வலதுபுறமாகத் திரும்பி வடதிசையில் 500 மீட்டர் சென்றால் கடம்பர் மலையை அடையலாம். இங்கு கடம்ப நாயனாரும், மங்களாம்பிகை தாயாரும் காட்சி தருகின்றனர். ஒரு சிறிய குளமும் அருகில் இருக்கிறது.
கிராமத்தின் தென் பகுதி வனச்சரகத்திற்கு உட்பட்ட காடுகளாய் இருக்கிறது. மேல்மலை என்கிற விஜயாலய சோழன் கோயில் மலைக்கு மேல் உள்ளது. அக்காடுகள் வழியாகச் சென்றும் மேல்மலைக்கு செல்லலாம். கிராமத்தின் மேற்குப் பக்கமாக சென்று அன்னவாசல் சாலையிலிருந்தும் சுலபமாக மேல்மலைக்கு செல்லலாம்.
காட்டு பாதை வழியாக செல்லும்போது குளம் ஒன்று எதிர்கொள்கிறது. இங்கு பதினெண் பூமி விண்ணகரம் என்கிற குடைவரை கோயிலும், விஜயாலய சோழன் கோயிலும் உள்ளது.
குரங்குகள் அங்கும் இங்கும் தாவித் திரிகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஓரளவு வருகிறார்கள். நாங்கள் சென்றிருந்தபோது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்
பேருந்துகளில் நிறைய பேர் வந்திருந்தார்கள். பின்னர் இவற்றை ரசித்தபடியே அடிவாரத்திலிருந்து பாறைகளில் வெட்டப்பட்ட படிகளில் குடைவரைக்கு ஏறிச் சென்றோம். ஜேசுதாஸ் பாடிய தமிழ் திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மனது அதைப் பாடியபடி இருந்தது.
"சொர்கத்தின் வாசற்படி; எண்ணக் கனவுகளில்!
பெண்ணல்ல நீயெனக்கு; வண்ணக் களஞ்சியமே!" - என்ற பாடலில்
"சித்தன்னவாசலின் ஓவியமே; சிந்தைக்குள் ஊறிய காவியமே!"
என்ற வரிகள் நினைவுக்குள் வந்து சென்றன.
முகப்பில் நான்கு தூண்கள் இருக்கின்றன. இதுவும் ஒரு குடைவரைக் கோயில்தான். அங்கு ஒரு கர்ப்பகிரஹமும் (sanctum), அர்த்தமண்டபமும் உள்ளன. உள்ளே சென்றோம். தியான நிலையில் அமர்திருக்கும் சிலைகள் ஒரு வித மன அமைதியை ஏற்படுத்தியது. இந்த சிலைகள் சமண தீர்த்தங்கரர்களாக இருக்ககூடும். ஒரு காலத்தில் அர்த்தமண்டபம்
முழுவதும் ஓவியங்களால் நிறைந்திருந்த கூரையிலும் சுவரிலும்
தற்போது சில ஓவியங்களை மட்டுமே காணமுடிகிறது.
மீதியெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதை அறிந்து மிக்க வேதனை
அடைந்தோம்.
Kadambar hill |
சிலு சிலுவென வீசும்
குளிர் காற்றில் சரியாக காலை ஐந்து
மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்டோம். ஊருக்கு வெளியே வந்து ஒரு சிறிய கடையில் தேநீர் அருந்தி விட்டு சுறுசுறுப்பை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.
பார்த்துகொண்டிருக்கும்போதே பொழுது மெல்ல விடியத் தொடங்கியது.
மேலூர் நான்கு வழிச் சாலையிலிருந்து பிரிந்து திருப்பத்தூர் சாலையை பிடித்தோம். சாலையில் இருமருங்கிலும் மரங்கள் இருப்பது ஒரு தனி அழகுதான். மருது சகோதரர்களை தூக்கிலிட்ட இடமான திருப்பத்தூர், சேதுபதி மன்னரின் கோட்டையான திருமயம் ஆகிய வரலாற்று சின்னங்களைக் கடந்து புதுக்கோட்டையை அடைந்தோம். புதுக்கோட்டையில் ஒரு சிறிய மெஸ்ஸில் இருவரும் காலை சிற்றுண்டியை முடித்துகொண்டோம். வயிற்றைக் கெடுக்காத உணவு. பின்னர் அங்கிருந்து கிளம்பி திருச்சி செல்லும் நெடுஞ் சாலையில் கீரனூருக்கும், புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பொம்மிடிமலை எனும் சிற்றூரிலிருந்து இடப் பக்கமாக திரும்பி மூன்று கிலோ மீட்டர்கள் சென்று நார்த்தா மலையை அடைந்தோம்.
இருபுறமும் ஆலவிருட்சங்கள்
நம்மை வரவேற்கின்றன. இங்கு கற்களும், பாறைகளும் நிறைந்த மலைகள் அதிகமாக காணப்படுகின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டுவதற்கு நார்த்தா மலையிலிருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற செய்தியை அறிந்தோம். இங்கு கடம்பர் மலைக் கோயிலும் (குடைவரை), விஜயாலய சோழன் கோயிலும் இந்திய தொல்பொருள் ஆணையத்தின் (ASI) பார்வையில் பாதுகாக்கபடுகின்றன. "சோழநாடு சோறுடைத்து" என்பார்கள். ஆனால் "சோழநாடு கல்லுடைத்து" என்றாலும் தகும். எப்படித்தான் கற்களை இங்கிருந்து தஞ்சை வரை கொண்டு சென்றார்களோ தெரியவில்லை. பெரிய பெரிய உருள் கட்டைகளை மாற்றி மாற்றி வைத்தும், யானைகளையும், காளைகளையும் பயன்படுத்தி கற்களை கொண்டு சென்றார்கள் என அறிந்தோம். தற்போது உள்ள கிரேன், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் இல்லாமல் வெறும் மனித ஆற்றலையும் விலங்குகளையும் மட்டுமே நம்பி எவ்வளவு பெரிய கோயிலை (தஞ்சை) எழுப்பியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்று நினைத்தபோது ஒரு நிமிடம் சிலிர்த்துப் போய்விட்டேன். எனக்கு 10000 BC Mummy போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் நினைவிற்குள் வந்து சென்றன.
Vijayaalaya sozhan Temple |
கிராமத்தை அடைந்தவுடன் வலதுபுறமாகத் திரும்பி வடதிசையில் 500 மீட்டர் சென்றால் கடம்பர் மலையை அடையலாம். இங்கு கடம்ப நாயனாரும், மங்களாம்பிகை தாயாரும் காட்சி தருகின்றனர். ஒரு சிறிய குளமும் அருகில் இருக்கிறது.
Forest Road |
காட்டு பாதை வழியாக செல்லும்போது குளம் ஒன்று எதிர்கொள்கிறது. இங்கு பதினெண் பூமி விண்ணகரம் என்கிற குடைவரை கோயிலும், விஜயாலய சோழன் கோயிலும் உள்ளது.
நார்த்தா மலையிலிருந்து புறப்பட்டு கிராமவழிச் சாலைகளின் வழியாக சித்தன்னவாசலுக்கு எங்களது பயணத்தை ஆரம்பித்தோம்.அறுவடை முடிந்த வயல் வெளிகளில் மேயும் மாடுகள், துள்ளி குறுக்கே ஓடும் ஆடுகள், புல்லுக் கட்டு சுமந்து செல்லும் பெண்கள், மாட்டுவண்டிகள், ட்ராக்டர்கள், என கிராமத்து வாசனைகளுடன் எங்கள் பைக் சீறிப் பாய்ந்து சென்றது. அடுத்த அரை மணி நேரத்தில் அன்னவாசலை அடைந்து வண்டியை நிறுத்தினோம். அங்கு ஒரு சிறிய உணவு விடுதியில் சுடச் சுட அன்னம் (சாப்பாடு) எங்களுக்கு பரிமாறப்பட்டது. ஒரு பிடி பிடித்துவிட்டு சித்தன்னவாசலை அடைந்து ஒரு மர நிழலில் ஓய்வெடுத்தோம். இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் நெடுஞ்சாலையில் 14 வது கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் சித்தன்னவாசல் அன்னவாசலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மலையடிவாரத்துக்குச் செல்லும் வழியில் நிறைய ஆலமரங்கள் படர்ந்திருப்பது கொள்ளை அழகு.
பேருந்துகளில் நிறைய பேர் வந்திருந்தார்கள். பின்னர் இவற்றை ரசித்தபடியே அடிவாரத்திலிருந்து பாறைகளில் வெட்டப்பட்ட படிகளில் குடைவரைக்கு ஏறிச் சென்றோம். ஜேசுதாஸ் பாடிய தமிழ் திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மனது அதைப் பாடியபடி இருந்தது.
"சொர்கத்தின் வாசற்படி; எண்ணக் கனவுகளில்!
பெண்ணல்ல நீயெனக்கு; வண்ணக் களஞ்சியமே!" - என்ற பாடலில்
"சித்தன்னவாசலின் ஓவியமே; சிந்தைக்குள் ஊறிய காவியமே!"
என்ற வரிகள் நினைவுக்குள் வந்து சென்றன.
முகப்பில் நான்கு தூண்கள் இருக்கின்றன. இதுவும் ஒரு குடைவரைக் கோயில்தான். அங்கு ஒரு கர்ப்பகிரஹமும் (sanctum), அர்த்தமண்டபமும் உள்ளன. உள்ளே சென்றோம். தியான நிலையில் அமர்திருக்கும் சிலைகள் ஒரு வித மன அமைதியை ஏற்படுத்தியது. இந்த சிலைகள் சமண தீர்த்தங்கரர்களாக இருக்ககூடும். ஒரு காலத்தில் அர்த்தமண்டபம்
முழுவதும் ஓவியங்களால் நிறைந்திருந்த கூரையிலும் சுவரிலும்
தற்போது சில ஓவியங்களை மட்டுமே காணமுடிகிறது.
மீதியெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதை அறிந்து மிக்க வேதனை
அடைந்தோம்.
நீந்துவது போலவும், மீன்கள்,
மலர் பறிக்கும் இளம் பெண்கள், மாடுகள் போன்ற உருவங்கள், நடனம், முத்திரைகள் மற்றும் முகபாவங்களும் மிக நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும் வரையபபட்டிருக்கின்றன. சமண மதத்தின் புகழ் பெற்ற முக்கியமான இடங்களில் சித்தன்னவாசல் மிகப்பழமை வாய்ந்த இடம். அஜந்தா ஓவியங்களுக்கு இணையான ஓவியங்கள் இங்கு மிகவும் பிரசித்திபெற்றது. இந்த இடம் பாண்டியர்களின் ஓவியக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மண்குதிரைகள் உள்ள கிராமக் கோயிலின் அருகில் செயற்கை புல்வெளிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு தாமரைக் குளமும் அதனருகில் இருக்கிறது. பின்னர் அங்கிருந்து சமண முனிகளின் படுகைக்கு சென்றோம்.
இது மலைக்கு மேலே உள்ள இயற்கையாக அமைந்த பாறை இடுக்கில் அமைந்திருப்பது வியப்பூட்டும் சிறப்பு.
தமிழ் மொழி வளர்ச்சியில் சமணர்களின் பங்கு மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. அந்திக் கருக்கலாவதற்கு முன்பே மதுரை நகரை நெருங்கி விட வேண்டுமென்று நாங்கள் திட்டமிட்டிருந்தபடியால் சித்தன்ன வாசலிலிருந்து வண்டியைக் கிளப்பினோம்.
மீண்டும் இதுபோன்ற ஒரு பகிர்வில் சந்திப்போம்.