Sunday 26 August 2012

தெய்வ தரிசனம்...

கூட்ட நெரிசலில் சிக்கி
வரிசையில் வியர்த்து வழிந்து
முன்னங்கால்களாலே எழும்பி
நடந்து பல தலைகள் தாண்டி
ஒரு கற்சிலையை கண்டு
வணங்கி விட்டு வெளியே
இழுத்து விடப்பட்டவுடன்
முகத்தில் வீசிய குளிர்ந்த
காற்று அன்பாக கேட்டது.
கடவுளை கண்டாயா? என்று..
நான் சிரித்து மட்டும் வைத்தேன்.

Saturday 25 August 2012

காக்காப் பொண்ணு

பழைய தெருக் கூத்தாடிகளும், நடிகர்களும்
பூசிக் கொள்ளும் அரிதாரம் பற்றிய ஒரு சுவையான செய்தி:
கிணறு தூர் வாரும்போதோ அல்லது நீர் நிலைகளின்
ஆழத்திலோ வெள்ளையாக அலுமினியத் தகட்டைப் போல
மினுமினுக்கும் ஒரு வஸ்துவை பார்த்திருக்கிறீர்களா?
கிணறா? அப்படின்னா என்ன? ன்னு கேட்கிறீர்களா?
சரி விடுங்கள். அதன் பெயர் தாளகம் என்று சொல்வார்களாம்.
மாணிக்க வாசகர் அதை "பொற் சுண்ணம்" என்கிறார்.
கிராமங்களில் அதை "காக்காப் பொண்ணு" என்று அழைப்பார்கள்.
அதை எடுத்து இடித்து சுண்ணமாக்கி மேலும் சில பொருள்கள்
சேர்த்து அரிதாரப் பவுடர் செய்து கொள்வார்களாம்.
இன்றைய நிலையோ மிகப் பரிதாபம்.
அவர்கள் வாழ்வும்தான். இப்படிதான் நமது பாரம்பரிய
அடையாளங்களை மெல்ல பதிவிடாமலே காணாமற்
செய்துவிடுகிறோம்.