Sunday 26 August 2012

தெய்வ தரிசனம்...

கூட்ட நெரிசலில் சிக்கி
வரிசையில் வியர்த்து வழிந்து
முன்னங்கால்களாலே எழும்பி
நடந்து பல தலைகள் தாண்டி
ஒரு கற்சிலையை கண்டு
வணங்கி விட்டு வெளியே
இழுத்து விடப்பட்டவுடன்
முகத்தில் வீசிய குளிர்ந்த
காற்று அன்பாக கேட்டது.
கடவுளை கண்டாயா? என்று..
நான் சிரித்து மட்டும் வைத்தேன்.

No comments:

Post a Comment