Friday 5 October 2012

அறிவு(த்) தீயது

உங்கள் ஆறாம் அறிவை வைத்துக் கொண்டு 
கொஞ்ச காலமேனும் சும்மா இருங்களேன்.

பாஷோ

Each day is a journey and the journey itself home - Basho
முடிவில்லாத காலத்தின் நித்ய பயணிகளே நாட்களும் மாதங்களும். கடந்துபோன வருடங்களும் அப்படியானதே. கடலின் மீது படகில் 
போனாலும், பூமியின் குறுக்காக குதிரையில் கடந்து சென்றாலும் 
காலத்தின் சுமையை நம் மீது ஏற்றிக் கொண்டே பயணிக்கிறோம். நம் மூதாதையர்களில் பலர் வழிப்பயணத்தில் இறந்து போயிருக்கிறார்கள்.


நானும் நீண்ட காலமாகவே காற்றில் அலைவுறும் மேகம் போல 
விருப்பமான பாதையிலே சுற்றியலையும் யாத்திரை செய்யவே விரும்பினேன். ஆனால் கடந்த வசந்தகாலத்தில்தான் கடற்கரை 
வழியாக வீடு திரும்பியிருந்தேன். புது வருடத்தின் முன்பாக சுமிதா 
ஆற்றின் கரையில் இருந்த என் நொய்ந்த வீட்டின் சிலந்தி வலைகளை சுத்தப்படுத்த விரும்பினேன். ஆனால் அதற்குள்ளாகவே மூடுபனி 
துவங்கி வயல் எங்கும் நிரம்பியிருந்தது. அடுத்த பயணத்தை நான் 
அப்போதே கிளம்பினால் மட்டுமே உரிய நேரத்தில் சிரஹவா நுழைவாயிலைக் கடக்க முடியும். கடவுள் என் ஆன்மாவை பற்றிக் கொண்டு என்னைப் புரட்டி போட்டது போன்ற உணர்ச்சியே ஏற்படுகிறது. சாலையின் முடிவற்ற காட்சிகளில் மூழ்கிப்போகாமல் என்னால் வீட்டில் அடைந்து கிடக்க முடியாது. புகழ் பெற்ற ஜென் கவிஞரான பாஷோவின்
Narrow Road to the Interior என்ற நூலிலிருந்து...
(மலைகள் சப்தமிடுவதில்லை - எஸ். ராமகிருஷ்ணன்)

Wednesday 3 October 2012

அறிவு தீயது

நிழல் மரத்திலொரு காக்கா 
இன்னொரு காக்காவிடம் 
ஆறாவது அறிவு 
மனுசனுக்குத்தான், 
நமக்கெதுக்கு? என்றது.
அங்கு வந்தவன் 
கோடாரியை
மரத்தில் இறக்கினான்.
இப்போது அவை 
செல்போன் டவரில் 
வெயிலில் அமர்ந்திருகின்றன.!